10th Tamil First Revision 2026: Official answer key | Sivagangai
பள்ளிக்கல்வித்துறை சிவகங்கை மாவட்டம்
பத்தாம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு 2025 தமிழ் - விடைக்குறிப்பு
பகுதி 1 (மதிப்பெண்கள் 15)
ஒரு மதிப்பெண் வினாக்கள்:
ஈ) சருகும் சண்டும்
இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
ஆ) விருந்தினரை ஏழு அடி வரை நடந்து சென்று வழியனுப்பினர்
ஈ) 3, 1, 4, 2
அ) வேற்றுமை உருபு
இ) பண்புத்தொகை
ஆ) வினையெச்சத்தொடர்
ஆ) இன்மையிலும் விருந்து
ஈ) மன்னன், இறைவன்
இ) திணை வழுவமைதி
இ) எம்+தமிழ் +நா
ஆ) குமரகுருபரர்
ஈ) செங்கீரை
அ) எண்ணும்மை
இ) காலில் அணிவது, இடையில் அணிவது, நெற்றியில் அணிவது
இரண்டு மதிப்பெண் வினாக்கள் (பகுதி 2)
16.
அ) உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு எது?
ஆ) தமிழ்த்தென்றல் திருவிக, போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர் யார்?
(பொருத்தமாக எழுதியிருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்)
17.
சிலம்பு 2. கிண்கிணி 3. அரைஞாண் 4. சுட்டி 5. குண்டலம் 6. குழை
18.
செந்நெல், வெண்ணெல், கார்நெல், சம்பா, மட்டை
19.
கருத்துப் பரிமாற்றம் செய்யப்படுகிறது.
மொழி வளம் பெறுகிறது.
பிறநாட்டு கலாச்சாரம், பண்பாட்டை அறியமுடிகிறது.
20.
சூரியனை மறைக்கும்.
தாகம் தீர்க்கும்.
மலை உச்சியில் நடக்கும்.
வானத்தில் நடக்கும்.
21.
"பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்"
22. பகுபத உறுப்பிலக்கணம் (அமர்ந்தான்):
அமர் + த்(ந்) + த் + ஆன்
பகுதி: அமர்
சந்தி: த், ந் ஆனது விகாரம்
இறந்தகால இடைநிலை: த்
படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று விகுதி: ஆன்
மூன்று மதிப்பெண் வினாக்கள் (பகுதி 3)
23. (இரு வினாக்களில் ஒன்று)
அ) பல்துறை ஊடகம்
ஆ) சுழல் காற்று
23. (தொடர் வகைகள் - மாற்று வினா)
அ) சிலையை சீலையால் மூடினான்
ஆ) விடு நான் வீட்டிற்குச் செல்ல வேண்டும்
(பொருத்தமாக எழுதியிருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்)
24.
அ) ஊட்டமிகு உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.
25.
ஆ) பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தவர் போட்டித் தேர்வில் வென்றார்.
அ) அடுக்குத்தொடர்
ஆ) பெயரெச்சத்தொடர்
26 / 27.
அ. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
ஆ. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
அ) இட வழுவமைதி
ஆ) கால வழுவமைதி
28.
தண்ணீர் குடி -> தண்ணீரைக்குடி (இரண்டாம் வேற்றுமைத்தொகை)
29.
நட்டான்
30.
காலை எழுந்தவுடன் தண்ணீரைக்குடித்தல் நல்ல பழக்கம்.
தயிர்க்குடம் - தயிரை உடைய குடம் (இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை).
கமலா தயிர்க்குடத்தை எடுத்துச்சென்றாள்.
வாழைக்கன்றை, பலாக்கன்று நட்டான், மாங்கன்று நட்டான், கத்தரி நாற்று நட்டான், நாற்றை நட்டான்.
அ) கடவுச்சொல்லும் கைரேகையும் கொண்டு திறன்பேசியைத் திறப்பது பழமையானது.
ஆ) செயற்கை நுண்ணறிவு, படம் எடுக்கும் காட்சியை அடையாளம் கண்டு அதற்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக்கொள்கிறது.
இ) உயர்வகைத் திறன்பேசியின் ஒளிபடக் கருவி, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கிறது.
31.
விருந்தோம்பலின் அடிப்படை தனித்து உண்ணாமை.
அமிர்தம் என்றாலும் தனித்து உண்ணாமை.
இக்காலத்தில் அது இல்லை.
இன்று கொடுத்து உண்பதும் இல்லை.
32.
வானத்தில் கரு தோன்றியது.
அப்போது காற்று உருவானது.
நெருப்பு பந்து போல பூமி தோன்றியது.
மழை பெய்தது.
உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் வந்தது.
ஐந்து மதிப்பெண் வினாக்கள் (பகுதி 4)
33.
வறுமையிலும் விருந்தளித்தனர்.
விதை நெல்லை உணவாக்கி விருந்தளித்தனர்.
வாளைப் பணயம் வைத்து விருந்தளித்தனர்.
34.
"புண்ணியப் புலவீர் யான் இப்போழ்து இடைக் காடனார்க்குப் பண்ணிய குற்றம் எல்லாம் பொறுக்க எனப் பரவித் தாழ்ந்தான்."
"நுண்ணிய கேள்வி யோரும் மன்னநீ நுவன்ற சொல்லாம் தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீத் தணிந்தது என்னா."
அல்லது
"மாற்றம் எனது மானிடத் தத்துவம்; மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!"
"எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை என்பதறிந்து ஏகுமென் சாலை!"
"தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்; தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!"
"கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!"
35.
எழுதுபவருக்குப் பரிசு (வினா எண் 34/35 காட்சிக்கு ஏற்ப விடை).
36.
"உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது; நானே தொடக்கம்; நானே முடிவு; நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!"
பாடிக்காட்டினார் (வினையெச்சத்தொடர்).
கேட்டுப் பாடினர் (வினையெச்சத்தொடர்).
கேட்ட பாடலில் (பெயரெச்சத்தொடர்).
சிறுவினாக்களைக் கேட்டார் (வேற்றுமைத்தொடர்).
அணி விளக்கம் (எடுத்துக்காட்டு உவமையணி):
ஒரு பொருளை மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறும்போது உவமை, உவமேயம் ஆகியன இடம் பெற்று உவமை மறைந்து வருவது எடுத்துக்காட்டு உவமையணி.
எடுத்துக்காட்டு: "பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்".
அணிப்பொருத்தம்:
உவமை: பாடலோடு பொருந்தாத இசை.
உவமேயம்: இரக்கம் இல்லாத கண்.
உவம உருபு: மறைந்து வந்துள்ளது.
37. அலகிடுதல்:
அரியவற்றுள் (நிரை நிரை நேர்) - கருவிளங்காய்
எல்லாம் (நேர் நேர்) - தேமா
அரிதே (நிரை நேர்) - புளிமா
பெரியாரைப் (நிரை நேர் நேர்) - புளிமாங்காய்
பேணித் (நேர் நேர்) - தேமா
தமராக் (நிரை நேர்) - புளிமா
கொளல் (நிரை) - மலர் (வாய்பாடு)
எட்டு மதிப்பெண் வினாக்கள் (பகுதி 5)
38.
அ) இடைக்காடனார் கதை:
இடைக்காடனார் மன்னர் முன் தன் பாடலைப் பாடினார்.
மன்னன் புலவனின் பாடலை கேட்கவில்லை.
புலவர் மனம் வருந்தினார், இறைவனிடம் முறையிட்டார்.
இறைவன் கடம்பவனத்தை விட்டுச்சென்றார்.
மன்னன் இறைவனிடம் வேண்டினார்.
இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தார்.
இறைவன் மீண்டும் கடம்பவனம் வந்தார்.
ஆ) காலக்கணிதம் (நயம் பாராட்டுதல்):
திரண்ட கருத்து: கவிஞனாகிய நான் ஓர் காலக்கணிதம் பொருள் நிறைந்த பாடல்களைப் படைப்பேன்.
மோனை நயம்: முதலெழுத்துகள் ஒன்றி வருவது மோனைநயம் ஆகும் (எ.கா: கவிஞன் - காலக்கணிதம், கருப்படு - பொருள).
எதுகை நயம்: இரண்டாம் எழுத்து ஒன்றி வரத்தொடுப்பது எதுகை நயமாகும்.
முரண்தொடை: எதிர் எதிரான சொற்கள் வருவதால் இப்பாடல் முரண்தொடையில் அமைந்துள்ளது (எ.கா: சரி x தவறு, ஆக்கல் x அழித்தல்).
அணி நயம்: கவிஞர் இப்பாடலை உயர்வுபடப் பாடியமையால் இப்பாடலில் உயர்வு நவிற்சி அணி பயின்று வந்துள்ளது.
பொருள் நயம்: கவிஞர் இப்பாடலைப் பொருள் நயம் தோன்றப் பாடியுள்ளார்.
39.
அ) இடம், நாள், விளித்தல், கடிதம், இப்படிக்கு, உறைமேல்முகவரி.
அல்லது
ஆ) அனுப்புநர், பெறுநர், விளித்தல், பொருள், கடிதப்பொருள், இப்படிக்கு, இடம், நாள், உறைமேல் முகவரி.
40.
பொருத்தமாக எழுதியிருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்.
41.
பொருத்தமாக எழுதியிருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்.
42.
அ) பொருத்தமாக எழுதியிருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்.
அல்லது
ஆ) "மதிப்பிற்குரிய பெண்களே ஆண்களே நான் தான் இளங்கோவன். பத்தாம் வகுப்பு பயின்று வருகிறேன். நான் தமிழ் கலாச்சாரத்தைப்பற்றி சில வார்த்தைகளைக் கூற இங்கு வந்துள்ளேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கலாச்சாரத்திலும் நாகரிகத்திலும் சிறந்தவர்களாக இருந்தனர் என்று சங்க இலக்கியம் காட்டுகிறது."
"மொழிக்கு இலக்கணம் வகுத்த தமிழர்கள் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்துள்ளனர். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் உலகம் முழுதும் வாழும் தமிழர்களில் வாழ்க்கை முறையில் தமிழ் கலாச்சாரம் வேரூன்றியுள்ளது. நமது கலாச்சாரத்தை எண்ணி நாம் பெருமையடைய வேண்டும். நன்றி."
43.
அ) காற்று மாசு (கட்டுரை):
முன்னுரை: காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளைக் காண்போம்.
தடுக்கும் முறைகள்: மரங்களை வெட்டக்கூடாது, மரங்களை வளர்க்க வேண்டும், குப்பை போடக்கூடாது, வண்டிகளை அதிகமாகப் பயன்படுத்தக்கூடாது, விறகைப் பயன்படுத்தக் கூடாது, குப்பை எரிக்கக் கூடாது, குளிர் சாதனம் பயன்படுத்தக் கூடாது, புகை வடிகட்டிகளை வைக்க வேண்டும்.
முடிவுரை: காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளைக் கண்டோம்.
அல்லது
ஆ) விருந்து உபசரிப்பு (கட்டுரை):
வரவேற்பு: எங்கள் இல்லத்திற்கு மாமா குடும்பத்தினர் வருகை புரிந்தனர். மாமா குடும்பத்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்றோம்.
உபசரிப்பு: அம்மா இன்முகத்துடன் வரவேற்றார். தேநீர் எடுத்து வந்து என் அம்மா கொடுத்தார்.
மாமா குடும்பத்தினர் தங்குவதற்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டது.
விருந்து உபசரிப்பு: விதவிதமான சாப்பாடு, அறுசுவை உணவு, சைவமும் அசைவமும் என உணவாக என் அம்மா சமைத்திருந்தார்.
வாழை இலையில் பரிமாறப்பட்டது. மகிழ்வுடன் உண்டனர்.
பிற்பகல் விருந்தினரின் மனம் உவகையில் நிறைந்ததால் நாங்களும் பெருமகிழ்ச்சி கொண்டோம்.
முடிவுரை: விருந்து உபசரிப்பில் நானும் என் தங்கையும் கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.
44.
கருப்பொருள் மாறாமல் எழுதியிருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்.
45.
குறிப்புச்சட்டகம் - முன்னுரை - உபதலைப்புகள் - முடிவுரை ஆகியவற்றுடன் பொருத்தமாக எழுதியிருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்.
